EBOOK

Dikshithar Kathaigal

Pammal Sambandha Mudaliar
(0)

About

[கும்பகோணத்தில் கௌரவம் வாய்ந்த தனவந்தர் குடும்பத்தைச் சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் என்ற ஒருவர் இருந்தார். அவர் சிறு வயது முதல் தன் புத்தியையெல்லாம் குறும்பு செய்வதிலேயே உபயோகித்து, அதில் மிகவும் நிபுணரானார். அவர் இறந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாயிற்று. அவரது குறும்புகளை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். அவைகளுள் சிலவற்றை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இனி இக்கதைகளிலெல்லாம் நம்மவரைத் தீட்சிதர் என்றே அழைப்போம்.]

நம்முடைய தீட்சிதர் அவர்கள் ஒரு முறை திருவிடைமருதூரில் ஓர் மிராசுதாருடைய வீட்டுக் கலியாணத்திற்குப் போயிருந்தார். அக்கலியாணத்திற்காக அம்மிராசுதார் ஒரு சிறந்த நாகசுர வாத்தியக்காரனை ஏற்பாடு செய்திருந்தார். அந்நாகசுரக்காரன் கொஞ்சம் கர்வி. கலியாணத்திற்கு வந்திருந்த சில பெரிய மனிதர்களை வணங்கினவன் நம்முடைய தீட்சிதர் அவர்களை வணங்காமல் வாசித்துக் கொண்டிருந்தான்.

இதை கவனித்த நமது தீட்சிதர் அவர்கள், 'ஆகட்டும் இவன் கர்வத்தையடக்க வேண்டு மென்று தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். சீக்கிரத்தில் தருணம் வாய்த்தது. நாக்சுரக்காரன் மிகவும் அற்புதமாய் கல்யாணி ராகம் வாசித்துக் கொஞ்சம் நிறுத்த, சபைக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் 'சபாஷ் சபாஷ்,'என்று மெச்சினார்கள்.

Related Subjects

Artists