EBOOK

Enniya Vanname

Ka. Appadurai
(0)

About

'அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்' என்பது பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் பொன்மொழி. எனவே, அறிவுடையோர் எந் நாட்டினராயினும் எக்குலத்தோராயினும் காலத்தால் முன்னையோராயினும் பின்னையோராயினும் போற்று தற்குரியர் ; ஏற்றற்குரியர்; அவர்மொழி என்றுங் குன்றா இள நலமுடையதாய்த் திகழும். இக்கருத்துக்கேற்ப விளங்கியவர் அறிஞர் ஜேம்ஸ் ஆலன் என்னும் மேலைநாட்டுத் திருமகனார். அவர்தம் அரிய கருத்துரைகளே இந்நூல்.

இது, 'எண்ணிய வண்ணமே' என்னும் பெயரோடு இன்று தமிழகத்தில் மலர்கின்றது. இம்மலரிலுள்ள கருத்துரைத் தேறல் தமிழ் நன்மக்கட்குப் புத்தம் புதிய விருந்து.

மக்களின் நெஞ்சில் தோன்றிய எண்ணமென்னும் நுண்பொருளே இன்று 'கட்புலனுக்குத் தோன்று கின்ற உலகக்காட்சிகள். கண்ணைக் கவரும் ஓவியங்கள் மாடங்கள் கூடங்கள் கோயில்கள் சிற்பங்கள் மின் பொறிவண்டிகள் வானொலி வானூர்தி காவியம் முதலிய எல்லாம் எங்கிருந்து தோன்றின. மகன் எண்ண அலைகளினின் றன்றோ? எண்ணம் நன்றாயின், நன்று கிளைக்கின்றது; எண்ணம் தீயதாயின் தீமை வளர்கின்றது. எண்ணத்தின் பருவடிவமே மேற்காட்டிய காட்சிகளும், நன்மையும் தீமையுமென்பது ஒருதலை.

மக்கள் தம் எண்ணத்தைத் தூய உலகநலனைக் கருதி இயக்குவாரானால் அவ்வழியே அது பெருகி வளர்ந்து தன் அரிய தன்மையை நிலையுறுத்துகின் றது. எண்ணவலிவினால் எத்தனை எத்தனை நுண் பொருள்களையும் பருப்பொருள்களையும் ஆக்கிப் பயனுறச் செய்கின்றனர்.

Related Subjects

Artists